கலவை அருகே மாமியாரை தாக்கிய மருமகன் கைது

கலவை அருகே மாமியாரை தாக்கிய மருமகன் கைது

அஜித்

ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அருகே உள்ள மேச்சேரி கெங்கையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் குமரேசன். இவரது மகன் அஜித் (21), கூலித்தொழிலாளி. இவர் அதே பகுதியில் உள்ள மீனாட்சி என்பவரது மகள் ரம்யாவை சில மாதங்களுக்கு முன்பு (19) காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இந்நிலையில், தம்பதியருக்குகிடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக ரம்யா கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது தாயார் வீட்டுக்கு சென்றார். இதையடுத்து, அஜித் மனைவியை அழைத்து வர சென்றுள்ளார். அங்கு அஜித்துக்கும், அவரது மாமியார் வீட்டாருக்குமிடையே ஏற்பட்ட தகராறில் அஜித் தனது மாமியார் மீனாட்சியை தாக்கி உள்ளார். இதில், காயமடைந்த மீனாட்சி வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மீனாட்சி தரப்பினர் தாக்கியதில் அஜித் காயமடைந்து கலவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து மீனாட்சி அளித்த புகாரின் பேரில் கலவை காவல் ஆய்வாளர் காண்டிபன் அஜித்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story