மாமனார் மாமியாரை  தாக்கி கொலை மிரட்டல் மருமகன் கைது

மாமனார் மாமியாரை  தாக்கி கொலை மிரட்டல் மருமகன் கைது

கைது

நாகர்கோவிலில் மாமனார் மாமியாரை  தாக்கி கொலை மிரட்டல் விடுத்த மருமகன் கைது செய்யப்பட்டார்.
குமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியை சேர்ந்தவர் சகாதேவன் (65)இவரது மனைவி பிரேமலதா (61). இவர்கள் இவர்களது மகள் சுபிதா ஷாலி(29) கடந்த மூன்று வருடங்களுக்கு முன் குளச்சல் பகுதியை சேர்ந்த ஜோ (29) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணத்தின் போது 41 பவுன் தங்க நகையை மகளுக்காக சகாதேவன் கொடுத்துள்ளார். இந்த நிலையில் பிரசவத்துக்காக கடந்த நான்கு மாதங்களுக்கு முன் சுபிதா தனது பெற்றோர் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது பெற்றோருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக தனது கணவர் ஜோவிடம் சுபிதா ஷாலி புகார் கூறியுள்ளார். இதை அடுத்து அவர் தனது மாமியார் மாமனாரை கண்டித்துடன் இதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று சுபிதா தூண்டுதலின் பேரில் ஜோ நாகர்கோவிலுக்கு சென்று தனது மாமனார் சகாதேவன் மற்றும் மாமியார் பிரேமலதாவை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் சகாதேவன் படுகாயம் அடைந்தார். இது தொடர்பாக வடசேரி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி, ஜோ மற்றும் சுபிதா ஷாலி ஆகிய இரண்டு பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில் ஜோ கைது செய்யப்பட்டார்.

Tags

Next Story