குடிபோதையில்  மாமனாரைக் கொன்ற மருமகன் கைது

சீர்காழி அருகே குடிபோதையில் மாமனாரை கொலை செய்த மருமகனை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தத்தங்குடியை சேர்ந்தவர் சம்பந்தம் மகன் பாலு .விவசாயி. இவரது மகள் பவானி. வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. இவரது கணவர் தரங்கம்பாடி பாலூர் கிராமத்தைச் சேர்ந்த கனகராஜ். இவர் மாமனார் வீட்டிலேயே தங்கியுள்ளார். மாமனார் பாலுவின் சொத்துகளை தனது பெயருக்கு மாற்றி கேட்டதால் இருவருக்கும் இடையே சொத்து பிரச்சனையால் ஒருவரை ஒருவர்தாக்கிக் கொள்வதுமுண்டு. இந்நிலையில் வேலைக்குச் செல்லாத கனகராஜ் குடிபோதையில் வீட்டிற்கு சென்று பாலுவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து கனகராஜ் மறைத்து வைத்திருந்த கத்தியால் பாலுவை குத்தியுள்ளார். பலத்தகாயமடைந்தவரை உடனடியாக சீர்காழி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். பாலு இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவத்தனர். இதுகுறித்து சீர்காழி போலீஸார், பாலு உடலைக் கைப்பற்றிப் பரிசோதனைக்கு அனுப்பினர். கொலை வழக்கு பதிந்து கனகராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags

Next Story