மாமனாரை கல்லால் தாக்கிக் கொன்ற மருமகன் கைது

மாமனாரை கல்லால் தாக்கிக் கொன்ற மருமகன் கைது

தம்மம்பட்டி அருகே மாமனாரை கல்லால் தாக்கிக் கொன்ற மருமகனை போலீசார் கைது செய்தனர். 

தம்மம்பட்டி அருகே மாமனாரை கல்லால் தாக்கிக் கொன்ற மருமகனை போலீசார் கைது செய்தனர்.
கெங்கவல்லி:சேலம்மாவட்டம்கெங்கவல்லி வட்டம் தம்மம்பட்டி அருகே உலிபுரத்தை சேர்ந்த, கூலித்தொழிலாளி சரவணன், 40. இவரது மனைவி தனலட்சுமி, 38. இவர்கள் இடையே கடந்த, 10ல் தகராறு ஏற்பட்டது. இதனால் நாகியம்பட்டியில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு தனலட்சுமி சென்றார். நேற்று முன்தினம் இரவு அங்கு சென்ற சரவணன், மாமனார் மருதை, 60, என்பவரிடம் சாப்பாடு போடும்படி கூறினார். அவர், மகளை அடித்தது குறித்து கேட்டார். இதில் வாக்குவாதம் ஏற்பட்டது. மறுநாள், அய்யனார் கோவில் பகுதியில் மருதை இறந்து கிடந்தார். தம்மம்பட்டி போலீசார் விசாரித்து சரவணன் மீது கொலை வழக்கு பதிந்து தேடினர். நேற்று போலீசார், சரவணனை கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'மனைவியிடம் தகராறு செய்த மருமகன், மாமனாரின் வீட்டுக்கும் சென்று தகராறு செய்தார். இதில் மாமனாரை கல்லால் தாக்கி கொலை செய்துள்ளார்' என்றனர்.

Tags

Next Story