காங்கேயம் அருகே பாப்பினில்  மாமனாரை கத்தியால் குத்திய மருமகன்

காங்கேயம் அருகே பாப்பினில்  மாமனாரை கத்தியால் குத்திய மருமகன்

படுகாயமடைந்த மாமனார்

காங்கேயம் அருகே பாப்பினில்  மாமனாரை கத்தியால் குத்திய மருமகனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

காங்கேயம் அடுத்த பாப்பினி வாழைத்தோட்டத்தில் குடியிருந்து வருகின்றார் வேலுசாமி (59). சிவன்மலை சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் டிக்கெட் கிளார்க்காக இந்து சமய அறநிலையத்துறையில் பணியாற்றி வருகிறார்.

இவருக்கு நிவேதா என்ற மகள் உள்ளார் . தனது மகளுக்கு மேட்டாங்ககாட்டுவலசு பகுதியை சேர்ந்த பிரபு @ பிரபாகரன் என்பவருடன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகன் உள்ளார்.

இந்நிலையில் கடந்த சில வருடங்களாக பிரபு மதுவிற்கு அடிமையாகி உள்ளதாகவும் இதனால் கணவன் மனைவிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மனைவி நிவேதா தந்தை வீட்டிற்கு பாப்பினி சென்றுவிடுவார். இதுபோல் வழக்கமாக கணவன் மனைவி குடும்பப்பிரச்சனை ஏற்படுவதும் பின்னர் இருவரும் சேர்ந்துவாழ்வதும் வழக்கமாக இருந்துள்ளது.

இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இதுபோல் கணவன் மனைவிக்கும் இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சனையால் நிவேதா தனது தந்தை வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில் பிரபு இன்று மனைவியை கூட்டிச்செல்ல தனது மாமனார் வீட்டிற்கு பாப்பினி வாழைத்தோட்டத்திற்கு சென்றுள்ளார்.

வேலுசாமி வீட்டிற்கு வந்த பிரபு வாக்குவாதத்தில் ஈடுபட்டு திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியால் வேலுசாமியின் கழுத்து பகுதியில் குத்திவிட்டதாகவும் அருகில் இருந்தவர்கள் மீட்டு வேலுசாமியை காங்கேயம் தலைமை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதித்த பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

காங்கேயம் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மனைவியின் தந்தையை கத்தியால் மருமகனே குத்தியது காங்கேயம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story