பைக் விபத்தில் மகன் பலி: தாய் படுகாயம்

பைக் விபத்தில் மகன் பலி: தாய் படுகாயம்

போலீசார் விசாரணை


குமாரபாளையம் அருகே போதைக்கு வைத்தியம் செய்ய வந்த போது பைக் விபத்தில் மகன் பலி, தாய் படுகாயமடைந்தார்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே போதைக்கு வைத்தியம் செய்ய வந்த போது டூவீலர் விபத்தில் மகன் பலியானதுடன் தாய் படுகாயமடைந்தார். பெரம்பலூர் மாவட்டம், நூத்தப்பூரில் வசிப்பவர்கள் சின்னதுரை, 43, கஸ்தூரி, 63. மகன் சின்னத்துரை அரசு பள்ளி ஆசிரியர். தாய் கஸ்தூரி வீட்டில் இருந்து வருகிறார். சின்னதுரைக்கு குடிப்பழக்கம் உள்ளதால், சங்ககிரி அருகே உள்ள பூமுடி சாமி கோவிலில் கயிறு கட்ட வேண்டி, இருவரும் நேற்றுமுன்தினம் பஜாஜ் பிளாட்டினா டூவீலரில், சின்னதுரை ஓட்ட, கஸ்தூரி பின்னால் உட்கார்ந்து வந்தார்.

நேற்றுமுன்தினம் மாலை 01:45 மணியளவில் குமாரபாளையம், சேலம் கோவை புறவழிச்சாலையில் கோட்டைமேடு மேம்பாலம் அருகே பி.எஸ்.ஜி திருமண மண்டபம் அருகில் வந்த போது, டூவீலர் நிலை தடுமாறி, சாலையோரம் இருந்த இரும்பு தடுப்பில் மோதியதில், கீழே விழுந்து இருவரும் பலத்த காயமடைந்தனர். குமாரபாளையம், ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற பின், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

சின்னதுரை சிகிச்சை பலனின்றி நேற்று காலை 10:45 மணியளவில் இறந்தார். கஸ்தூரிக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Tags

Next Story