மகன் மாயம் - தாய் போலீசில் புகார்

மகன் மாயம் - தாய் போலீசில் புகார்

காவல் நிலையம் 

விருதுநகர் யானை குழாய் தெரு பகுதியில் வேலைக்கு சென்ற மகனை காணவில்லை என தாய் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரிக்கின்றனர்.
விருதுநகர் யானைக் குழாய் தெருவை சேர்ந்தவர் பத்ரகாளி 48 .இவர் கணவர் செல்வராஜ் இவர்களுக்கு அருள்ராஜ் என்ற 24 வயது மகன் உள்ளார். அருள்ராஜ் சித்தாள் வேலை செய்து வந்ததாகவும் அவருக்கு திருமணம் ஆகவில்லை எனவும் கூறப்படுகிறது இதைத் தொடர்ந்து கடந்த 30ஆம் தேதி காலை வீட்டிலிருந்து வெளியே சென்ற மகன் தற்போது வரை வீடு திரும்பவில்லை எனவும் அவருடைய மொபைல் இன்னும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருப்பதால் தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும் வெளியூர் வேலைக்கு சென்று இருக்கலாம் என இத்தனை நாட்கள் நினைத்திருந்ததாகவும் தன் மகன் தற்போது வரை சிதறும்ப வராத காரணத்தினால் பத்ரகாளி விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகார் அடிப்படையில் மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story