செல்போன் வாங்க தந்தை பணம் தராததால் மகன் தீக்குளித்து தற்கொலை

செல்போன் வாங்க தந்தை பணம் தராததால் மகன் தீக்குளித்து தற்கொலை

காவல் நிலையம்

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பழையூரில் செல்போன் வாங்க தந்தை பணம் தராததால் மணமடைந்த மகன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பழையூரைச் சேர்ந்தவர் பழனியாண்டி .இவரது மகன் 25 வயதான கார்த்திக். இவர் தனது தந்தையிடம் செல்போன் வாங்க பணம் தருவாறு கேட்டுள்ளார். ஆனால் அவரது தந்தை பணம் கொடுக்க மறுத்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 23 ந்தேதி வீட்டுக்கு வந்த கார்த்திக் மீண்டும் செல்போன் வாங்க தனது தந்தையிடம் பணம் கேட்டு உள்ளார். ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்துள்ளார்.இதனால் மணமுடைந்த கார்த்திக் உடலில் மண்ணெண்னை ஊற்றி தீக்குளித்துக் கொண்டார்.

இதைக் கண்ட அவரது பெற்றோர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் அங்கு தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவலறிந்த சிறுகனூர் போலீசார் அவரது உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து சிறுகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story