சோனியா காந்தி பிறந்த நாள் - ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு

சோனியா காந்தி பிறந்த நாள் - ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு

சோனியா காந்தி பிறந்தநாள் 

இந்திய தேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் 77வது பிறந்தநாளையொட்டி சேலம் மாநகர் மாவட்ட ஓ.பி.சி அணி சார்பில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. சேலம் கன்னங்குறிச்சி பகுதியில் உள்ள தாய்மை அன்பு கரங்கள் இல்லத்தில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஓ.பி.சி அணி மாநகர் மாவட்ட தலைவர் பாபு தலைமையில் உணவு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாநில துணைத்தலைவர் சுப்ரமணி, மாநில பொது செயலாளர் பர்வேஷ், மாவட்டத் துணைத் தலைவர்கள் கண்ணன், முகமது சாதிக், மாவட்ட பொது செயலாளர் ஹரிஹரன், பர்கத் மற்றும் நிர்வாகிகள் கலாம், ஜக்ரியா ஆகியோர் கலந்து கொண்டனர்.



Tags

Next Story