3 அணிகளாக சோனியா காந்தி பிறந்த நாள் விழா

குமாரபாளையத்தில் 3 அணிகளாக சோனியா காந்தி பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காங்கிரஸ் கட்சி சார்பில் 3 அணிகளாக சோனியா காந்தி பிறந்த நாள் நகர தலைவர் ஜானகிராமன் தலைமையில் கொண்டாடப்பட்டது. சேலம் சாலை மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனைகள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

நிர்வாகிகள் சுப்ரமணி, தங்கராஜ், சாமிநாதன் உள்பட பலர் பங்கேற்றனர். மாவட்ட துணை தலைவர் சக்திவேல் தலைமையில் முனியப்பன் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நட்டதப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. நிர்வாகிகள் மனோகர், ஆறுமுகம், மாரிமுத்து, கிருஷ்ணன், சிவராஜ் உள்பட பலர் பங்கேற்றனர். நகர துணை தலைவர் சிவகுமார், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆதிசேஷன் தலைமையில் காளியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிர்வாகிகள் கோகுல்நாத், விஸ்வநாதன், சொக்கலிங்கம் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story