சோனியா பிறந்த தினம் - 37 பேருக்கு தையல் இயந்திரம் வழங்கல்

சோனியா பிறந்த தினம் - 37 பேருக்கு தையல் இயந்திரம் வழங்கல்
தையல் இயந்திரம் வழங்கிய எம் எல் ஏ 

குமரி மாவட்டம் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் சார்பில், சோனியா காந்தியின் 77- வது பிறந்தநாள் விழா கருங்கலில் நடைபெற்றது. தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவரும் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினருமான ராஜேஷ் குமார் தலைமையில் நடந்த விழாவில் 77 - கிலோ கேக் வெட்டி அனைவரும் இனிப்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து ராஜேஷ் குமார் எம். எல்.ஏ. தனது சொந்த செலவில் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 37 - ஏழை மற்றும் விதவை பெண்களுக்கு தையல் மிஷின்கள் மற்றும் கொடும் நோயினால் பாதிக்கப்பட்ட இரண்டு நோயாளிகளுக்கு தலா ரூ. 15 ஆயிரம் வீதம் ரூ. 30 ஆயிரம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் எம்.பி, குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பினுலால் சிங் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



Tags

Next Story