தாயின் உடலை தானமாக வழங்கிய மகன்கள் !

தாயின் உடலை தானமாக வழங்கிய மகன்கள் !

தானம்

தாயின் உடலை மகன்கள் அரசு மருத்துவக் கல்லூரிக்கு மாணவர்களின் கல்வி, ஆராய்ச்சி படிப்பிற்கு தானமாக அளித்தனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்புத்தாய் 84. இவர் உடல்நலக் குறைவு காரணமாக சாத்தூரில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மார்ச் 16 காலை 6:15 மணிக்கு உயிரிழந்தார். இவரின் உடலை தானமாக அளிக்க வேண்டும் என சிப்காட் இளநிலை பொறியாளர் மாரிமுத்து, தனியார் பேப்பர் மில் எலக்ட்ரிக்கல் பொறியாளர் சமய கருப்பசாமி ஆகிய இரு மகன்களும் முடிவு செய்தனர். தாய் சுப்புத் தாயின் உடலுக்கு இறுதி சடங்குகளை செய்து விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு மாணவர்களின் கல்வி, ஆராய்ச்சி படிப்பிற்கு தானமாக அளித்தனர். இவருக்கு தீன் சீதாலட்சுமி சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.

Tags

Next Story