ஸ்ரீ மூக்கரை நரசிம்ம பெருமாள் கோவில் சொர்க்கவாசல் திறப்பு

ஸ்ரீ மூக்கரை நரசிம்ம பெருமாள் கோவில் சொர்க்கவாசல் திறப்பு

 ஸ்ரீ மூக்கரை நரசிம்ம பெருமாள் கோவில் சொர்க்கவாசல் திறப்பு

எடப்பாடியில் ஸ்ரீ மூக்கரை நரசிம்ம பெருமாள் கோவில் சொர்க்கவாசல் திறப்பு கோவிந்த கோஷத்துடன் நடைபெற்றது
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சேலம் மாவட்டம் எடப்பாடி வட்டம் ஆவணி பேரூர் மேல்முகம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீதேவி,பூதேவி,சமேதஸ்ரீ மூக்கறை நரசிம்ம பெருமாள் திருக்கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு வெகு விமர்சையாக நடைபெற்றது. அதற்கு முன்னதாக கோவில் முன்பாக அதிகாலை 4 மணி முதலே யாக பூஜைகள் நடைபெற்று, கோவில் நிர்வாகி மற்றும் முக்கியஸ்தர்களுக்கு பூரணக்கும் கும்பம் மரியாதையுடன் கோயிலை சுற்றி வந்து சொர்க்கவாசலுக்கு முன்பாக கோமாதா பூஜை நடைபெற்றது. பின்னர் ஸ்ரீதேவி, பூதேவி,சமேதஸ்ரீ,மூக்கறை நரசிம்ம பெருமாள் சுவாமி சொர்க்கவாசல் வழியாக வான வேடிக்கை,மங்கள வாத்தியம் முழங்க பல்லக்கில் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். அப்போது பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என முழக்கமிட்டவாறு பக்தியுடன் சுவாமியை வழிபட்டனர். பின்னர் ஸ்ரீதேவி,பூதேவி,சமேதஸ்ரீ, மூக்கறை நரசிம்ம பெருமாள் சுவாமிக்கு பூஜைகள் நடைப்பெற்றது.ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர், அப்போது பக்தர்களுக் அனைவருக்கு பிரசாதம் வழங்ப்பட்டது.

Tags

Next Story