சுந்தரராஜ பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு

சுந்தரராஜ பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு

சொர்க்கவாசல் திறப்பு

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சுந்தரராஜ பெருமாள் கோவிலில் பரமபத வாசல் மூலம் பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர்
சிவகங்கை சுந்தரராஜ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நடந்தது. உற்ஸவர் சுந்தரராஜ பெருமாள் தாயார்களுடன் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து சிறப்பு பூஜை நடந்தது. நட்சத்திர தீபம், ஏக முக தீபம் மற்றும் ஷோடச உபசாரம் நடந்தது. வேத மந்திரங்கள் முழங்க மகா பஞ்சமுக கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து சொர்க்க வாசல் எனும் பரமபத வாசலுக்கு அர்ச்சகர்கள் பூஜை செய்து கற்பூர ஆராதனை காண்பித்தனர். பக்தர்களின் கோவிந்தா கோஷங்கள் முழங்க சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

Tags

Next Story