பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி

பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி

சொர்க்கவாசல் திறப்பு

தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் ஆலயத்தில் நடைபெற்ற பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோஷம் முழங்க சுவாமி தரிசனம் செய்தனர்
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வைணவ ஆலயங்களில் சொர்க்கவாசல் திறப்பு நடைபெறுவது வழக்கம் தென் தமிழகத்தில் உள்ள பெருமாள் ஆலயங்களில் பரமபத வாசல் எனப்படும் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி மாலை நடைபெறும். இதையொட்டி தூத்துக்குடியில் உள்ள பழமையான வைகுண்டபதி பெருமாள் ஆலயத்தில் இன்று மாலை சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ராமானுஜருக்கு சொர்க்க வாசலை திறக்கப்பட்டு பெருமாள் காட்சியளித்தார் . பெருமாள் சொர்க்க வாசல் வழியாக எழுந்தருள கோவிந்தா கோஷம் முழங்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக வெளியே வந்தனர் பின்னர் பெருமாள் மற்றும் ராமானுஜருக்கு சிறப்பு பூஜை தீபாராதனைகள் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பெருமாள் மற்றும் ராமானுஜரை வழிபட்டு சென்றனர்.

Tags

Next Story