நாமக்கல் : சொர்க்கவாசல் திறப்பு விழா நடைபெற்றது

நாமக்கல் : சொர்க்கவாசல் திறப்பு விழா நடைபெற்றது

சொர்க்கவாசல் திறப்பு விழா நடைபெற்றது

ஆதிகேசவ பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ராஜவீதி பகுதியில் காவிரி கரையோரம் ஆதி கேசவப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் 28 ஆம் ஆண்டு வைகுண்ட ஏகாதசி பெருவிழா நடைபெற்றது. காலை 4:00 மணிக்கு சுப்ரபாதத்துடன் துவங்கிய நிகழ்வானது மங்கல இசையுடன், வைகுண்ட ஏகாதசி விசேஷ பூஜையுடன் பரமபத சொர்க்கவாசல் திறப்பு, நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என கரகோஷங்கள் இடையே திறக்கப்பட்டது. இந்த நிகழ்வில் ஆதி கேச பெருமாளுக்கு சிறப்பு தீபாராதனை நிகழ்வுகளும் விசேஷ பூஜைகளும் நடைபெற்றது. நிகழ்வில் பங்கேற்ற பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. காலை துவங்கி இரவு வரை தொடர்ந்து வரும் அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்படும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது...

Tags

Next Story