தெற்கு மாவட்ட திமுக சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை

தெற்கு மாவட்ட திமுக சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை

அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

சட்டமேதை அம்பேத்கரின் 67-வது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, அரசியல் கட்சி தலைவர்கள் உள்பட பலரும் அம்பேத்கர் நினைவு தினத்தில் மரியாதை செலுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருச்சி தெற்கு மாவட்ட கழகம் சார்பில் மாவட்ட கழக செயலாளரும் பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழிகாட்டுதலின் பேரில், திருச்சி இ.பி. ரோட்டில் அமைந்துள்ள சட்ட மேதை அம்பேத்கர் திருவுருவச் சிலைக்கு மாநகரக் கழகச் செயலாளர் மதிவாணன் தலைமையில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் வண்ணை அரங்கநாதன், சபியுல்லா மற்றும் கழக நிர்வாகிகள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கலந்து கொண்டு சிறப்பித்தனர்

Tags

Next Story