சேலத்தில் தென் மாநில அளவிலான கபாடி போட்டி

சேலத்தில் தென் மாநில அளவிலான கபாடி போட்டி

 சேலத்தில் நடந்த தென் மாநில அளவிலான கபாடி போட்டியில் சென்னை பேங்க் ஆப் பரோடா அணி முதல் பரிசை தட்டிச் சென்றது.

சேலத்தில் நடந்த தென் மாநில அளவிலான கபாடி போட்டியில் சென்னை பேங்க் ஆப் பரோடா அணி முதல் பரிசை தட்டிச் சென்றது.

சேலம் அழகாபுரம் பகுதியில் கதிரவன் பிரதர்ஸ் கபடி குழு சார்பில் தென்னிந்திய அளவிலான கபடி போட்டி கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வந்தது.

இரவு பகலாக நடைபெற்று வந்த இந்த போட்டியில் தமிழகம் ஆந்திரா கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து வங்கி துறை காவல் துறை மற்றும் பல்வேறு துறைகளைச் சார்ந்த கபடி வீரர்களும் பல்வேறு மாவட்ட கபாடி வீரர்களும் என அறுபது அணிகள் பங்கேற்றனர். மிக விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் நடைபெற்ற இந்த போட்டியின் இறுதி போட்டி நேற்று நடைபெற்றது

இறுதி போட்டிக்கு பேங்க் ஆப் பரோடா கற்பகம் யூனிவர்சிட்டி தமிழ்நாடு போலீஸ் மற்றும் பிஜே பிரதர்ஸ் ஆகிய அணிகள் பங்கேற்று விளையாடின மிகவும் எதிர்பார்ப்புடன் நடைபெற்ற இந்த போட்டியில் அதிக புள்ளிகள் எடுத்து பேங்க் ஆப் பரோடா அணி முதல் பரிசை தட்டிச் சென்றது முதல் பரிசாக 80 ஆயிரம்ரூபாய் ரொக்க பரிசம் கோப்பையும் இரண்டாவது பரிசாக 50 ஆயிரம் ரூபாய் மற்றும் பரிசுக்கோப்பையும் மூன்றாவது பரிசாக முப்பதாயிரம் ரூபாய் நான்காவது பரிசாக முப்பது ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டது .

சிறப்பு பரிசுகளை சேலம் ஓம் முருகா யூபிவிசி உரிமையாளர் முருகன் பொறியாளர் ராமச்சந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பரிசு கோப்பினை வழங்கி பாராட்டு தெரிவித்தனர் இதேபோல சிறந்த வீரர்களுக்கு பரிசு மற்றும் ஊக்கத்துறை வழங்கி கௌரவிக்கப்பட்டது இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை கதிரவன் பிரதர்ஸ் கபடி குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.

Tags

Next Story