சிவகாசியில் தென்மாநில அளவிலான டென்னிஸ் போட்டி

சிவகாசியில் தென்மாநில அளவிலான டென்னிஸ் போட்டி
மாநில அளவிலான டென்னிஸ் போட்டி
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் 3 நாட்கள் நடைபெறும் தென் மாநில அளவிலான டென்னிஸ் போட்டியில் 200க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி YRTV டென்னிஸ் அகாடமி சார்பாக தென் மாநில அளவிலான டென்னிஸ் போட்டி சிவகாசியில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா , கார்நாடகா உள்ளிட்ட ஐந்து மாநிலங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றுள்ளனர் . 10 ஆம் தேதி இன்று துவங்கி 12 ஆம் தேதி வரை மூன்று நாட்கள் இந்த போட்டியானது நடைபெறுகிறது.

இதில் சிறப்பு விருந்தினராக பயனிர் ஆசியா குழுமத்தின் இயக்குனர் மகேஸ்வரன் கலந்து கொண்டு போட்டியை துவங்கி வைத்தார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் போட்டியின் தலைவரும்,லவ்லி ஆஃப்செட் இயக்குநருமான செல்வகுமார் , தலைமை பயிற்சியாளர் சிவகுமாரும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story