ஓட்டுச்சாவடி மையங்களில் எஸ்.பி. ஆய்வு

ஓட்டுச்சாவடி மையங்களில் எஸ்.பி. ஆய்வு

வாக்குசாவடி மையத்தில் எஸ்பி ஆய்வு

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் ஓட்டுச்சாவடி மையங்களில் போலீஸ் எஸ்.பி. ஆய்வு மேற்கொண்டார்.

லோக்சபா தேர்தல் நடப்பதையொட்டி அரசியல் கட்சியினர் பிரச்சாரம் நேற்றுமுன்தினம் மாலையுடன் நிறைவு பெற்றது. வங்கி மேலாளர்கள், நிதி நிறுவன நிர்வாகிகள், நகைக்கடை அதிபர்கள், டாஸ்மாக் கண்காணிப்பாளர்கள், டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் என பலதரப்பட்ட நபர்களுடன், போலீசார் பல கட்டங்களாக ஆலோசனை கூட்டம் நடத்தி, எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தினர். ஓட்டுச்சாவடி ஏற்பாடு பணிகள் நடந்து வரும் நிலையில், போலீசார் உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டு வருகின்றனர்.

தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைககள் குறித்து, சேலம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. உமா, நேரில் பங்கேற்று, டி.எஸ்.பி. இமயவரம்பன், இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட போலீசாரிடம் கேட்டறிந்து, ஆலோசனை கூறினார். நேற்று நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்.பி. ராஜேஷ்கண்ணன் நேரில் வந்து, நகராட்சி அலுவலகம் அருகில், சின்னப்பநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பல ஓட்டுச்சாவடிகளை ஆய்வு செய்து, பாதுகாப்பு பணிகள் குறித்து ஆலோசனை கூறினார்.

Tags

Read MoreRead Less
Next Story