நன்னிலம் பகுதியில் எஸ் பி ஜெயக்குமார் ஆய்வு

நன்னிலம் பகுதியில் எஸ் பி ஜெயக்குமார் ஆய்வு

எஸ்பி ஆய்வு

ஸ்ரீவாஞ்சியம் வாஞ்சிநாத சுவாமி திருக்கோவில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு பாதுகாப்பு பணிகளை எஸ்பி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

நன்னிலம் தாலுகா ஸ்ரீவாஞ்சியம் வாஞ்சிநாத சுவாமி திருக்கோவில் குடமுழுக்கு வரும் பிப்ரவரி 8ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது குடமுழுக்கில் அதிக அளவிலான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ள கூடும் என்பதால் அங்கு மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து எஸ்பி ஜெயக்குமார் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு பணிகள் குறித்து அறிவுரை வழங்கினார். அப்போது நன்னிலம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் தமிழ்மாறன் மற்றும் நன்னிலம் காவல் ஆய்வாளர் முத்துலட்சுமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்,

Tags

Next Story