அதிமுக வேட்பாளர் ஆதரித்து எஸ் பி சண்முகநாதன் பிரச்சாரம் !

அதிமுக வேட்பாளர் ஆதரித்து எஸ் பி சண்முகநாதன் பிரச்சாரம் !

எஸ் பி சண்முகநாதன் 

தூத்துக்குடி தொகுதி அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணிக்கு ஆதரவாக திருச்செந்தூர் பகுதியில் அதிமுக தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் 2 நாள்கள் பிரச்சாரம் செய்கிறார். 

தூத்துக்குடி மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்பி சண்முகநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: நடைபெறும் நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தல் 2024ல் அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் சிவசாமிவேலுமணி போட்டியிடுகிறார்.

அவருக்கு ஆதரவாக இன்று 05.04.2024 உடன்குடி ஒன்றியத்திலும், நாளை 06.04.2024 ஆழ்வார்திருநகரி மற்றும் திருச்செந்தூர் ஒன்றியத்திலும் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக நானும் தேர்தல் பணிக்குழுப் பொறுப்பாளர்களும் இரட்டை இலை சின்னத்தில் வாக்குகள் சேகரிக்கிறோம்.

இதில் உடன்குடி ஒன்றியத்தில் காயாமொழி ரோடு சந்திப்பில் காலை 8 மணிக்கு ஆரம்பித்து பரமன்குறிச்சி பஜார், அம்மன் புரம், நயினார் பத்து, தண்டுபத்து, செட்டிவிளை, வெள்ளாளன் விளை, வீரநாடார் குடியிருப்பு, எள்ளுவிளை, மாநாடு, மெஞ்ஞானபுரம், கல்விளை, நங்கைமொழி, வேப்பங்காடு, லெட்சுமிபுரம், செட்டியாபத்து, பூச்சிவிளை, சந்தையடியூர், கிறிஸ்டியா நகரம், தேரியூர், கீழத் தாண்டவன் காடு, சிறுநாடார் குடியிருப்பு, மாதவன் குறிச்சி, மனப்பாடு மற்றும் கல்லாமொழியில் இரவு 10.00 மணிக்கு நிறைவடைகிறது.

மேலும் நாளை ஆழ்வார்திருநகரி கிழக்கு ஒன்றியம் வெள்ளரிக்காயூரணி தேவர் சிலைக்கு மாலை அணிவித்து பிரச்சாரம் துவங்கி, பிரகாசபுரம், வாழையடி, திருமறையூர், மணிநகர், மூக்குபீறி, பாட்டக்கரை, கச்சனாவிளை, நாலுமாவடி, அங்கமங்கலம், குரும்பூர், வரண்டியவேல், தெற்கு ஆத்தூர், கீரணூர், தலைவன்வடலி, ஆவாரங்காடு, சேர்ந்தபூமங்கலம், புன்னக்காயல், வடக்கு ஆத்தூர், சேதுக்குவாய்த்தான், ராஜபதி, குரங்கணி, தென்திருப்பேரை, குருக்காட்டூர், மனத்தி, புறையூர், முருகன் குறிச்சி, நா.முத்தையாபுரம், நடுநாலுமூலை கிணறு, காயாமொழி, பூச்சிகாடு, செங்குழி, பள்ளிபத்து, காணம், சோணக்கன் விளை, அம்மன்புரம், வீரமாணிக்கம், மூலக்கரையில் இரவு நிறைவு பெறுகிறது.

இந்நிகழ்வுகளில் சம்மந்தப்பட்ட மாவட்ட ஒன்றிய, நகர, பேரூராட்சி கழக நிர்வாகிகள் சார்பு அணிகளின் நிர்வாகிகள் பூத் கமிட்டி நிர்வாகிகள் மகளிர்கள் அனைவரும் சம்மந்தப்பட்ட இடங்களில் பிரச்சாரத்தில் கலந்துகொள்ளும் படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளது.

Tags

Next Story