பதற்றமான வாக்குச்சாவடிகளில் எஸ்பி ஆய்வு

வேலூர் மாவட்டத்தில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளில் எஸ்.பி மணிவண்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி வேலூர் மாவட்டத்தில் பல்வேறு முன் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. வேட்பு மனு பரிசீலனையும் முடிந்துள்ளது. நாடாளுமன்ற தொகுதியில் உள்ள 227 பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.வேலூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள 48 பதற்றமான வாக்குச்சாவடிகளில் மாவட்ட எஸ்பி மணிவண்ணன் ஆய்வு செய்தார். அவர் அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தி, போலீசாருக்கு அறிவுரை வழங்கினார்.

Tags

Read MoreRead Less
Next Story