காவலர்களுக்கு சேமநல நிதி வழங்கிய எஸ்பி
காவலர் சேமநல நிதி
விருதுநகரில் இரண்டு காவலர் களுக்கு காவலர் சேம நல நிதி எஸ்.பி
விருதுநகர் மாவட்டத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் இரண்டு காவலர்களுக்கு சேமநல நிதியை மாவட்ட எஸ்பி வழங்கினார்.
விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன் கோவில் காவல் நிலையத்தில் பணிபுரியும் தலைமைக் காவலர் சுரேஷ்குமார் என்பவருக்கு தலை யில் ஏற்பட்ட இரத்தக்கசிவுக்கு மேற்கொண்ட மருத்துவ அறுவை சிகிச்சைக்காக செலவு செய்த தொகை ரூ.7,24,184/-யினையும் மற்றும் விருதுநகர் மாவட்ட ஆயுதப்படையில் பணிபுரியும் தலைமைக்காவலர் விஜயராஜ் என்பவருக்கு இடுப்பு மற்றும் மூட்டு அறுவை சிகிச்சைக்காக மேற் கொண்ட மருத்துவ செலவு ரூ.2,54,340/-யினையும் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் விருதுநகர் மாவட்ட தமிழ்நாடு காவலர் சேமநல நிதி மாவட்ட குழுத்தலைவராகிய ஸ்ரீனிவாச பெருமாள் தமிழ்நாடு காவலர் சேம நல நிதி மைய குழு நிதியிலிருந்து வழங்கினார்.
Next Story


