இல்லம் தேடி கல்வி மையம் சார்பில் சிட்டுக்குருவிகள் தினம்

குமாரபாளையத்தில் இல்லம் தேடி கல்வி மையம் சார்பில்சிட்டுக்குருவிகள் தினம் கொண்டாடப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நாராயண நகர் பகுதியில் செயல்பட்டு வரும் இல்லம் தேடி கல்வி மையத்தில் சிட்டுக்குருவிகள் தினம் விடியல் ஆரம்பம் சார்பாக கொண்டாடப்பட்டது. இல்லம் தேடி கல்வித் திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விடியல் பிரகாஷ் தலைமை வகித்தார். சிட்டுக்குருவிகள் தாகம் தீர்க்க மாணவ மாணவியர் தண்ணீர் வைக்க வேண்டும் மற்றும் சிறுதானியங்கள் வைத்து காக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இது தொடர்பாக பேச்சுப்போட்டி, ஓவிய போட்டி நடத்தப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசாக புத்தகங்கள் வழங்கப்பட்டது. மேலும் மாணவ மாணவிகள் சிட்டு குருவிகளுக்கு தண்ணீர் மற்றும் உணவு தானியங்கள் வைப்போம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள். இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னார்வலர் காயத்ரி, தீனா உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story