மார்கழி மாதம் முதல் நாளை முன்னிட்டு ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகம் - பக்தர்கள் பங்கேற்பு

மார்கழி மாதம் முதல் நாளை முன்னிட்டு ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகம் - பக்தர்கள் பங்கேற்பு

மார்கழி மாதம் முதல் நாளை முன்னிட்டு ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகம் 

சிறப்பு அலங்காரத்தில் பக்தர்கள் தரிசனம் செய்தனர்
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை நகர் குண்டூரணி பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ ஐயப்ப சுவாமி திருக்கோவிலில் மார்கழி மாத முதல் நாளை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனைகள் நடைபெற்றது. முன்னதாக மூலவர் ஐயப்ப சுவாமி மற்றும் உற்சவ தெய்வங்களுக்கு நெய், திருமஞ்சன பொடி, மஞ்சள், பால், தயிர், பஞ்சாமிர்தம், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கொண்டு அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடர்ந்து சுவாமிக்கு சந்தன காப்பு அலங்காரம் சாற்றி மலர் மாலைகள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் உதிரி புஷ்பங்களால் அர்ச்சனைகள் செய்து, பல்வேறு தீப ஆராதனைகளும், சோடச உபச்சாரங்களும் நடைபெற்றன. நிறைவாக வேத மந்திரங்கள் முழங்க மகா பஞ்சமுக கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ ஐயப்ப சுவாமியை வழிபட்டனர்.

Tags

Next Story