புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்

புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்

ஸ்ரீ ரகுமாயி சமேத ஸ்ரீ பாண்டுரங்கன்

சிவகங்கை பாண்டுரங்கன் திருக்கோவிலில் புத்தாண்டை முன்னிட்டு சொர்ணமாலை அலங்காரம் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை நகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ ரகுமாயி சமேத ஸ்ரீ பாண்டுரங்கன் திருக்கோவிலில் 2024 ஆம் ஆண்டு புத்தாண்டை முன்னிட்டு சொர்ணமாலை அலங்காரம் நடைபெற்றது. முன்னதாக மங்கள விநாயகர்க்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து மூலவர் பாண்டுரங்கன் ரகுமாயி மற்றும் உற்சவருக்கும் சொர்ண மாலைகள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து துளசிக்கொண்டு அர்ச்சனைகள் செய்து பஞ்சமுக கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பாண்டுரங்கன் ரகுமாயி தாயாரை வழிபட்டனர்.

Tags

Next Story