சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்

சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்

கால்நடை முகாம் 

வேணாநல்லூரில் நடந்த சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாமை ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ கண்ணன் துவக்கி வைத்தார்.
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் கோட்ட கால்நடை பராமரிப்பு துறை சார்பில் வேணாநல்லூர் கிராமத்தில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைப்பெற்றது. இதனை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன் தொடங்கி வைத்தார். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பசுமாடுகள், செம்மறி ஆடுகள், வெள்ளாடுகளுக்கு குடற்புழு நீக்க மருந்துகள் வழங்கபட்டது. மேலும் பசு மற்றும் எருமை மாடுகளுக்கு செயற்கை முறை கருவூட்டல் செய்யபட்டது. பின்னர் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள் மற்றும் மாட்டு கொட்டகை பராமரிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது. இதில் கால்நடை உதவி மருத்துவர்கள், உதவியாளர்கள், பொதுமக்கள், விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story