சிறப்பு வங்கிக் கடன் முகாம் - மாவட்ட ஆட்சியர் கற்பகம் தகவல்

சிறப்பு வங்கிக் கடன் முகாம் - மாவட்ட ஆட்சியர் கற்பகம் தகவல்

மாவட்ட ஆட்சியர் கற்பகம் 

கடனுதவிகள் பெற பிப்-23ம் தேதி அன்று சிறப்பு வங்கிக் கடன் முகாம் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் கற்பகம் தகவல்
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிப் 23 அன்று மாலை 4.00 மணியளவில் வங்கிக் கடன் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த சிறப்பு முகாமில் மாவட்ட தொழில் மையம், மாவட்ட மாற்றுத்திறானளிகள் நலத்துறை, மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல துறை, தாட்கோ, வேளாண்மைத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொள்ள உள்ளார்கள். எனவே அரசுத்துறைகளின் திட்டங்கள் மூலம் கடனுதவிகள் பெற விருப்பமுள்ளவர்கள் இந்த முகாமின் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், விவரங்களுக்கு பொது மேலாளர், மாவட்டத் தொழில் மையம், மாவட்ட ஆட்சியர் வளாகம், பெரம்பலூர் -621212 ஐ நேரடியாகவோ அல்லது 8925533976 தொலைபேசி எண்ணிலோ அணுகலாம் என மாவட்ட ஆட்சியர் கற்பகம், பிப்ரவரி - 22 ம் தேதி வெளியிட்டுள்ள தகவலில் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story