மேல்மலையனூருக்கு 100 சிறப்பு பஸ்கள் இயக்கம்

மேல்மலையனூருக்கு 100 சிறப்பு பஸ்கள் இயக்கம்

சிறப்பு பேருந்து 

மேல்மலையனூர் அம்மன் கோவிலுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் நாளை (வெள்ளிக்கிழமை) வைகாசி மாத அமாவாசை ஊஞ்சல் சேவை நடக்கிறது. இதனை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் வேலூர் மண்டலம் சார்பில் வேலூரில் இருந்து 50 சிறப்பு பஸ்களும், திருப்பத்தூரில் இருந்து 30 சிறப்பு பஸ்களும், ஆற்காட்டில் இருந்து 20 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story