வார இறுதிநாளை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

வார இறுதிநாளை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் வார இறுதி நாளை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என மேலாண் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் வார இறுதி நாளை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என மேலாண் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் வார இறுதி நாளை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என மேலாண் இயக்குனர் தெரிவித்துள்ளார். விழுப்புரத்தில் வார இறுதி நாளான 1.3.24 வெள்ளிக்கிழமை மற்றும் 2. 3.24 சனிக்கிழமை அன்று மக்கள் கிளாம்பாக்கத்தில் இருந்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சிதம்பரம், விருதாச்சலம், திருவண்ணாமலை மற்றும் போளூர் ஆகிய ஊர்களுக்கு அதிக அளவில் பயணம் செய்வார்கள் என்பதால் அதற்கு ஏதுவாக விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் சார்பாக கூடுதலாக வெள்ளிக்கிழமை அன்று 180, சனிக்கிழமை 240, என மொத்தம் 420 சிறப்பு பேருந்துகளை மேற்கண்ட வழித்தடங்களில் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே பயணிகள் https://www.tnstc.in/home.html என்ற இணையதள மூலம் முன்பதிவு செய்து இச்சிறப்பு பேருந்துகளை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் பயணிகளின் அடர்வு குறையும் வரை தேவைக்கேற்ப பேருந்துகளை ஏற்பாடு செய்திடவும், பேருந்து இயக்கத்தினை மேற்பார்வை செய்திடவும் அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என மேலாண் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story