தை அமாவாசையையொட்டி மாதேஸ்வரன் மலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்

தை அமாவாசையையொட்டி மாதேஸ்வரன் மலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்

பைல் படம்

தை அமாவாசை மற்றும் வார இறுதி நாட்களையொட்டி சேலம் கோட்டம் சார்பில் நாளை முதல் 11-ந்தேதி வரை 3நாட்கள் பல்வேறு வழித்தடங்களில் 150 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக சேலம் கோட்டம் சார்பில் முக்கிய பண்டிகை மற்றும் வார இறுதி நாட்களையொட்டி பயணிகளின் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், நாளை (வெள்ளிக்கிழமை) தை அமாவாசை மற்றும் வார இறுதி நாட்களையொட்டி சேலம் கோட்டம் சார்பில் நாளை முதல் 11-ந் தேதி வரை 3 நாட்கள் பல்வேறு வழித்தடங்களில் 150 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

இந்த சிறப்பு பஸ்கள் சேலம் புதிய பஸ்நிலையம், பெங்களூரு, சென்னை, ஓசூர், கோவை, திருப்பூர், திருவண்ணாமலை, சிதம்பரம் ஆகிய பஸ் நிலையங்களில் இருந்து இயக்கப்படுகிறது. சென்னையில் இருந்து சேலம், நாமக்கல், ஓசூர், தர்மபுரி, மேட்டூருக்கும், சேலத்தில் இருந்து சென்னை, மதுரை, பெங்களூருவுக்கும், ஓசூரில் இருந்து சென்னை, திருச்சி, மதுரைக்கும், நாமக்கல்லில் இருந்து சென்னைக்கும், திருச்சியில் இருந்து ஓசூருவுக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

அதேபோல், திருவண்ணாமலையில் இருந்து பெங்களூருவுக்கும், ஓசூரில் இருந்து சேலம், புதுச்சேரி, கடலூருக்கும், சேலத்தில் இருந்து சிதம்பரம், காஞ்சீபுரத்திற்கும், ஈரோட்டில் இருந்து பெங்களூருவுக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன, இதுதவிர அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் சார்பில் முன்பதிவு மையத்திலும் பயணிகள் முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்ளலாம். இதேபோல், தை அமாவாசையையொட்டி சேலம் கோட்டத்தில் இருந்து மாதேஸ்வரன் மலைக்கு நாளை (வெள்ளிக்கிழமை) சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து மேட்டூர் மற்றும் பல்வேறு ஊர்களுக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன என்றும், இதனால் பயணிகள் கூட்டநெரிசல் இல்லாமல் பாதுகாப்பான முறையில் பயணம் மேற்கொள்ளுமாறு சேலம் கோட்ட போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story