'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்ட சிறப்பு முகாம்

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட சிறப்பு முகாம்

'உங்களைத் தேடி உங்கள் ஊரில்

வேடசந்தூா் வட்டத்தில் 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்ட சிறப்பு முகாம் நாளை நடைபெறுகிறது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி வெளியிட்ட செய்திக் குறிப்பு: மக்களை நாடி, அவா்களது குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீா்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' என்ற திட்டம் தமிழக அரசு சாா்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் இந்தத் திட்டம், நான்காம் கட்டமாக வேடசந்தூா் வட்டத்தில் புதன்கிழமை செயல்படுத்தப்படுகிறது. இதையொட்டி, செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5.45 மணி வரை எரியோடு வருவாய் ஆய்வாளா் அலுவலகத்தில் பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்படும் என்றாா் அவா்.

Tags

Next Story