திருநங்கைகள் நலத்திட்ட சிறப்பு முகாம்

திருநங்கைகள் நலத்திட்ட சிறப்பு முகாம்

ஆட்சியர் ஜெயசீலன் 

விருதுநகர் மாவட்ட திருநங்கைகள் பயன்பெறும் வகையில் நலத்திட்ட சிறப்பு முகாம்  வரும் 21ஆம் தேதி நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட சமூக நல அலுவலகத்தின் மூலம் வரும் 21 ஆம் தேதி விருதுநகர் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் காலை 10.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெறுகிறது. இம்முகாமில் கீழ்காணும் சேவைகள் செய்து தரப்படுகின்றன. திருநங்கைகள் நல வாரிய அட்டை வழங்குதல்,ஆதார் அட்டையில் திருத்தம் மேற்கொள்ளுதல்,முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை வழங்குதல்,ஆயுஷ்மான் பாரத் அட்டை வழங்குதல்,வாக்காளர் அட்டை வழங்குதல் மேற்கண்ட நாளில் நடைபெறும் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாமில் அனைத்து திருநங்கைகள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags

Next Story