90 கிராம பஞ்சாயத்துகளில் சிறப்பு முகாம்

90 கிராம பஞ்சாயத்துகளில் சிறப்பு முகாம்
மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் 
விருதுநகர் மாவட்டத்தில் கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளாச்சித் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள 90 கிராம பஞ்சாயத்துகளில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்தார்.
கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளாச்சித் திட்டம் 2023-24-ம் ஆண்டில் விருதுநகர் மாவட்டத்தில் 90 கிராம பஞ்சாயத்துகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இக்கிராமங்களில் 07.02.2024 மற்றும் 28.02.2024 ஆகிய இரு தினங்களில் வேளாண்மைத்துறை மற்றும் பல்வேறு இதர துறைகள் ஒருங்கிணைந்து விவசாயிகள் பயனடையும் வண்ணம் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இம்முகாமில் விவசாயிகளுக்கு பல்வேறு வேளாண் திட்டங்கள் பற்றி எடுத்துரைத்தல், பி எம் கிசான் மற்றும் பிற திட்டங்களில் பயனாளிகளை பதிவு செய்தல், வண்டல் மண் எடுக்க விவசாயகளிடமிருந்து விண்ணப்பம் பெறுதல், கால்நடைகள் நலம் பேண முகாம் (கால்நடைகளுக்கு செயற்கை கருத்தரித்தல் மற்றும் குடற்புழு நீக்கம் செய்தல்) பயிர் கடன் வழங்க விவசாயிகளிடமிருந்து விண்ணப்பம் பெறுதல் என விவசாய வளர்ச்சிக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே, 2023-24-ஆம் ஆண்டில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளாச்சித் திட்டம் செயல்படுத்தப்படும் 90 கிராம பஞ்சாயத்துக்களைச் சார்ந்த விவசாயிகள் இந்த சிறப்பு முகாமை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story