நித்திய சுமங்கலி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்

ராசிபுரத்தில் புத்தாண்டை முன்னிட்டு நித்திய சுமங்கலி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் பூஜை நடந்தது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் திருக்கோவில் உள்ளது. திருக்கோவிலில் ஒவ்வொரு முக்கிய விசேஷ நாட்களில் அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்படுவது வழக்கம். அதன்படி ஆங்கில புத்தாண்டு வருட பிறப்பை முன்னிட்டு ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் க்கு முக்கிய அபிஷேகங்கள் ஆன பால், தயிர், மஞ்சள், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர் போன்ற வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று தொடர்ந்து வெள்ளி காப்பு மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் க்கு மகாதீபாரணை காட்டப்பட்டது. இதில் ராசிபுரம் சுற்றியுள்ள பல்வேறு பகுதியிலிருந்து வருட பிறப்பு புத்தாண்டை முன்னிட்டு அம்மனை தரிசனம் செய்து சென்றனர்.

Tags

Next Story