தப்பியோடிய விசாரணை கைதியை பிடிக்க தனிப்படை அமைப்பு

தப்பியோடிய விசாரணை கைதியை பிடிக்க தனிப்படை அமைப்பு

எஸ்பி சிலம்பரசன் 

திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்து தப்பியோடிய விசாரணை கைதியை இரண்டு தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம் பணகுடியை சேர்ந்த விசாரணை கைதி மணிகண்டன் நேற்று (ஏப்.24) திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நெஞ்சுவலிக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பொழுது தப்பி ஓடினார். இந்த நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் உத்தரவின் படி விசாரணை கைதி மணிகண்டனை பிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story