சிறப்பு கிராம சபை கூட்டம்

வெள்ளபட்டி ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

கரூர் மாவட்டம், கடவூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட , வெள்ளபட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட, சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி தலைவர் முருகேசன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணை தலைவர் தர்மராஜ், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கார்த்திகேயன், வட்டார வள பயிற்றுனர் இந்துமதி, ஊராட்சி செயலாளர் மோகன் குமார் உள்ளிட்ட கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் அண்மையில் நடைபெற்ற சமூக தணிக்கை குறித்து பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், பொதுமக்கள் தெரிவித்த பல்வேறு குறைபாடுகள் குறித்து கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டு, உடனடியாக அதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தீர்மானம் இயற்றப்பட்டது.

Tags

Next Story