சிறப்பு கிராம சபை கூட்டம்

சிறப்பு கிராம சபை கூட்டம்

சிறப்பு கிராம சபை 

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஊராட்சி ஒன்றியம் செங்கீரை ஆலங்குடியில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் அழகு கருப்பையா தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் 497 ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மெர்ச்சி ரம்யா அறிவித்திருந்தார்.

இதனை அடுத்து புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஊராட்சி ஒன்றியம் செங்கீரை பகுதிக்குட்பட்ட ஆலங்குடி கிராமத்தில் இந்த கிராம கூட்டத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது இந்த கிராம சபை கூட்டத்தில் மூன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் பயனாளிகள் பட்டியல்,ஊரக குடியிருப்பு பழுதுபார்க்கும் பட்டியல், 15 ஆவது நிதி குழு மானிய பணிகள் ஆகியவற்றை பதிவு செய்து ஒப்புதல் அளிக்கும் பணிகள் குறித்த தீர்மானம் இயற்றப்பட்டது.

பின்னர் கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ் மூன்று பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். முன்னதாக இந்த சிறப்பு கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் அழகு கருப்பையா தலைமையில் நடைபெற்றது.. இதில் செங்கீரை துணைத்தலைவர், வார்டு உறுப்பினர் செங்கீரை காத்தையா மற்றும் மற்ற வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி செயலாளர்,அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story