ஆரணி அடுத்த இராட்டினமங்கலத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம்

ஆரணி அடுத்த இராட்டினமங்கலத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம்

சிறப்பு கிராம சபை கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த இராட்டினமங்கலம் கிராமத்தில் கிராம வளர்ச்சி திட்டத்திற்கான சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் செல்வம் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக துணை வட்டார வளர்ச்சி திட்ட அலுவலர் மகாலட்சுமி பங்கேற்றார். இந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில் வரும் 2024ம்ஆண்டிற்கான மேற்கொள்ள உள்ள வளர்ச்சி பணிகளான சாலை, பக்க கால்வாய், கல்வெட்டு கால்வாய்,மேல்நீர் தேக்க தொட்டி, கழிப்பறை, தெரு விளக்கு,உள்ளிட்ட வளர்ச்சி பணிகள் குறித்து எடுத்துரைக்கபட்டன. இதில் ஊராட்சி மன்ற துணை தலைவர் கந்தசாமி, வார்டு உறுப்பினர்கள் இ.பி.நகர் குமார், நந்தன், உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட கிராம பொது மக்கள் பங்கேற்றனர். இறுதியில் ஊராட்சி செயலர் விஜயகுமார் நன்றி கூறினார்.

Tags

Next Story