மாணவர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம்

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று கல்லூரியில் சேரும் மற்றும் இதுவரை கல்லூரியில் சேர இயலாத மாணவர்களுக்காக சிறப்பு குறைதீர்க்கும் முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது

விருதுநகர் மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று, உயர்கல்விக்கு விண்ணப்பிக்காத, மற்றும் குறிப்பிட்ட துறைக்கு விண்ணப்பித்து சேர்க்கை கிடைக்கப் பெறாத மாணவர்களுக்கு வழிக்காட்டு விதமாக சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயசீலன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாணவர்களிடமிருந்து, உயர்கல்வி பயில்வதற்கான பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான சுமார் 100 மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயசீலன் , ஒவ்வொரு மாணவரிடமும் தனித்தனியாக அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். பின்னர், உயர்கல்விக்கு விண்ணப்பித்த மாணவர்களிடம் சந்தேகங்கள் மற்றும் குறைகளையும்,உயர்கல்விக்கு விண்ணப்பிக்காத மாணவ, மாணவியர்கள் ஒவ்வொருவரிடமும் அதற்கான காரணங்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் கேட்டறிந்து . குடும்ப சூழ்நிலை, பொருளாதாரம், சரியான வழிகாட்டியின்மை, பாடப்பிரிவு கிடைக்காத நிலை போன்ற காரணங்களால் உயர்கல்வி தொடர முடியாமல் இருப்பதாக தெரிவித்த மாணவ, மாணவியர்களிடம், அரசின் மூலம் வழங்கப்படும் திட்டங்கள், சலுகைகள், ஊக்கத்தொகைகள், எதிர்கால வேலைவாய்ப்புகள், மதிப்பெண்களுக்கு ஏற்றவாறு பாடப்பிரிவு துறைகளை தேர்ந்தெடுப்பது உள்ளிட்டவை குறித்தும், தீர்வுகளை எடுத்துக்கூறியும், உயர்கல்வி தொடர்வதற்கான உரிய அறிவுரை மற்றும் ஆலோசனைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.

Tags

Next Story