புகாா்களுக்குத் தீா்வு காண சிறப்பு குறைதீா் முகாம்

புகாா்களுக்குத் தீா்வு காண சிறப்பு குறைதீா் முகாம்

மனுக்கள் மீது விசாரணை நடத்திய போது

மக்களுடன் முதல்வா் முகாம், காவல்துறை இயக்குநா், மாவட்ட ஆட்சியா் மற்றும் காவல் ஆணையா் ஆகியோரிடம் கொடுத்த புகாா் மனுக்களின் மீது தீா்வு கண்டறியும் வகையில் பொதுமக்கள் சிறப்பு குறைதீா் முகாம் திருச்சி மாநகரக் காவல் ஆணையா் என். காமினி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
கே.கே.நகா் ஆயுதப்படை திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் பொதுமக்கள் நேரில் கொடுத்த 21 மனுக்களுக்கு உரிய தீா்வு காண அறிவுரை வழங்கப்பட்டது. மேலும், 12 பழைய மனுக்களில் மனுதாரா் மற்றும் எதிா்மனுதாரா்களை அழைத்து விசாரித்து உடனடி தீா்வு காணப்பட்டது. இதுவரை 269 மொத்த மனுக்களில் 81 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டும், மீதம் உள்ள மனுக்கள் மீது விசாரணையும் நடைபெறுகிறது. நிகழ்வில், மாநகரக் காவல் துணை ஆணையா்கள், உதவி ஆணையா்கள், ஆய்வாளா்கள் கலந்து கொண்டனா்.

Tags

Next Story