மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்

மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்

சிறப்பு குறைத்தீர் கூட்டம்

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுதிறனாளிகள் நலத்துறை சார்பில் சிறப்பு குறைத்தீர் கூட்டம் நடைபெற்றது.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாற்றுத்திறனாளிகளான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது .

இந்த முகாமில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 12 நபர்களுக்கு ரூபாய் 29 ஆயிரம் மதிப்பில் நலவாரிய கல்வி உதவி தொகை ,9 நபர்களுக்கு ரூபாய் 4,75,300 மதிப்புள்ள செயற்கைக்கால், ஆறு நபர்களுக்கு ரூபாய் 41,160 மதிப்பில் மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம், ஐந்து நபர்களுக்கு ஸ்மார்ட் செல்போன், மூன்று நபர்களுக்கு மூன்று சக்கர சைக்கிள் என மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் . இந்த நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளி நலத்துறை அலுவலர் புவனா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story