ஷீரடி ஸ்ரீ அனுகிரக சாய்பாபா அன்பாலயத்தில் சிறப்பு லட்சார்ச்சனை

ஷீரடி ஸ்ரீ அனுகிரக சாய்பாபா அன்பாலயத்தில் சிறப்பு லட்சார்ச்சனை
பரதநாட்டிய துவக்க நிகழ்ச்சி
ஷீரடி ஸ்ரீ அனுகிரக சாய்பாபா அன்பாலயத்தில் சிறப்பு லட்சார்ச்சனை நடைபெற்றது.
குமரி மாவட்டம் இரணியலில் ஷீரடி ஸ்ரீ அனுகிரக சாய்பாபா அன்பாலயம் உள்ளது. இங்கு லட்சார்ச்சனை வேள்வி நடைபெற்றது. வேள்வியினை அன்பாலய தந்திரி சுவாமி சூர்யா ஆனந்த சர்மா பூஜை மற்றும் ஹோமங்கள் நடத்தி வைத்து தொடங்கி வைத்தார். சிறப்பு நிகழ்ச்சியில் மாநில வள்ளலார் பேரவை தலைவர் சுவாமி பத்மேந்திரா ஆசியுரை வழங்கினார்கள். தொடர்ந்து நடைபெற்ற மாபெரும் அன்னதான நிகழ்ச்சியை அன்பாலயத்தின் தலைவர் டாக்டர் கோலப்பன் தலைமையில் இரணியல் காவல் ஆய்வாளர் செந்தில்வேல் குமார் தொடங்கி வைத்தார்கள். முடிவில் டமரு ஸ்ரீ நாட்டியஷேத்ரா மாணவி பிரயோசிகா என்பவரின் பரதநாட்டியம் நடைபெற்றது. இவ்விழாவில் ஏராளமான சாய்பாபா பக்தர்கள் கலந்து கொண்டார்கள்.

Tags

Next Story