அரசு பள்ளியில் குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

அரசு பள்ளியில் குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

மருத்துவ முகாம் 

சங்கரன்கோவிலில் அரசு பள்ளியில் குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள இருமன்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வைத்து கரிவலம்வந்தநல்லூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் கோவிந்தன் தலைமையில் செவிலியர் கோமதி மற்றும் கண்ணன் ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினரால் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமில் மாணவர்களின் உடல் பரிசோதனை, செவித்திறன் மற்றும் பார்வைத்திறன் போன்ற சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story