மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் பாராஞ்சியில் நடைபெற்றது.

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தை அடுத்த பாராஞ்சியில் உள்ள திருமண மண்பத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவச்சான்றுகள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கான பல்வேறு அரசு துறைகள் மூலம் ஒற்றைச்சாளர முறையில் ஒருங்கிணைந்த சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட 117 மாற்றுத்திறனாளிகளில், 53 மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவிகளுக்கு தேர்வு செய்யப்பட்டனர். முகாமில் 3 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இதில் அரக்கோணம் ஒன்றிய குழுத்தலைவர் நிர்மலா சவுந்தர், மாற்றுத்திறனாளி நல அலுவலர் சரவணக்குமார், அரக்கோணம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சவுந்தர், ஆர்த்தோடிக் தொழில்நுட்ப வல்லுநர் ஆனந்தன், பிசியோதெரபிஸ்ட் பெஜுலா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story