நாமக்கல் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்!

நாமக்கல் நகராட்சியில் பணிபுரியும் சுமார் 400க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு உயர்தர மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

நாமக்கல் நகராட்சி, எம்.எம். மருத்துவமனை மற்றும் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நாமக்கல் துறையூர் சாலையில் உள்ள நகராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இம்முகாமில் நாமக்கல் நகராட்சியில் பணிபுரியும் சுமார் 400க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்க உயர்தர மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

ரத்த வகை கண்டறிதல் சர்க்கரை அளவு ,ரத்த கொழுப்பு அளவு ,இ.சி.ஜி, ஸ்கேன், கண் பரிசோதனைகள் மற்றும் பல்வேறு பரிசோதனைகள் தூய்மை பணியாளர்களுக்கு மேற்கொள்ளப்பட்டு மருத்துவ குழுவினரால் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் நாமக்கல் நகர்மன்ற தலைவர் கலாநிதி மற்றும் ஆணையாளர் சென்னுகிருஷ்ணன், நகர்மன்ற துணைத் தலைவர் பூபதி, நகர் நல அலுவலர் கஸ்தூரிபாய், துப்புரவு அலுவலர் திருமூர்த்தி ,நகர மன்ற உறுப்பினர்கள், துப்புரவு ஆய்வாளர்கள் செல்வகுமார் பாஸ்கர், மருத்துவர்கள் மற்றும் நகராட்சி பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story