தஞ்சாவூர் அருங்காட்சியகத்தில் மார்ச் 14ல் சிறப்பு மருத்துவ முகாம் 

தஞ்சாவூர் அருங்காட்சியகத்தில்  மார்ச் 14ல் சிறப்பு மருத்துவ முகாம் 

தஞ்சாவூர் அருங்காட்சியக தரைதளத்தில் மார்ச்.14 வியாழக் கிழமை அன்று சிறப்பு மருத்துவ முகாம் காலை 10 முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது.


தஞ்சாவூர் அருங்காட்சியக தரைதளத்தில் மார்ச்.14 வியாழக் கிழமை அன்று சிறப்பு மருத்துவ முகாம் காலை 10 முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது.

தஞ்சாவூர் அருங்காட்சியகம் வளாகத்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க சிறப்பு புகைப்படக் கண்காட்சி கடந்த மார்ச்.9 அன்று தொடங்கப்பட்டு வரும் 15 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தமிழக அரசின் அனைத்து துறைகளின் சாதனைகள், திட்டங்கள் குறித்த நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள், இக்கண்காட்சியில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

இக்கண்காட்சியினை ஏராளமான பொதுமக்கள் மாணவ, மாணவியர்கள் நாள்தோறும் பார்வையிட்டு வருகின்றனர். இந்நிகழ்ச்சியின், ஒரு பகுதியாக மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுரையின்படி, பொதுமக்கள், குழந்தைகள், செய்தியாளர்களுக்காக சிறப்பு மருத்துவ முகாம் அருங்காட்சியக தரைதளத்தில் மார்ச்.14 வியாழக் கிழமை அன்று காலை 10 முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையினர் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.

இந்த மருத்துவ முகாமினை பொதுமக்கள், குழந்தைகள், பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags

Next Story