எஸ் பி தலைமையில் சிறப்பு கலந்தாய்வு கூட்டம்

எஸ் பி தலைமையில் சிறப்பு கலந்தாய்வு கூட்டம்

ஆலோசனை கூட்டம் 

திருவாரூரில் எஸ்பி தலைமையில் நடைபெற்ற சிறப்பு கலந்தாய்வு கூட்டத்தில் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் எஸ்பி அலுவலகத்தில் சிறப்பு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. பொதுமக்கள் காவல் நிலையத்தில் அளிக்கும் புகார் மனுக்கள் மீது உடனடியாக விசாரணை மேற்கொண்டு கால தாமதம் இன்றி நடவடிக்கை மேற்கொள்ள எஸ்பி அறிவுறுத்தினார் .

பொதுமக்கள் கூட்ட நெரிசல் மிகுந்த பகுதிகளிலும், காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி பகுதிகளில் காவலர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்றும் ,கண்டுபிடிக்கப்படாமல் நிலைமையில் உள்ள வழக்குகளின் தற்போதைய நிலை குறித்தும் ,குற்ற வழக்குகளில் கைது செய்யப்படாமல் தலைமறைவாக இருந்து வரும் குற்றவாளிகளை கைது செய்யவும் உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.இந்த கூட்டத்தில் ஏராளமான காவல் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story