பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் சிறப்பு மனு விசாரணை முகாம்

பெரம்பலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வேலுமணி தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் சிறப்பு மனு விசாரணை முகாம் நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வேலுமணி தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் சிறப்பு மனு விசாரணை முகாம் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் அளவில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வேலுமணி தலைமையில் சிறப்பு மனு விசாரணை முகாம் நடைபெற்றது. இந்த சிறப்பு மனு முகாமில் கலந்து கொண்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பொதுமக்களிடம் நேரடியாக புகார் மனுவைப் பெற்றார்.

மேலும் மனு அளித்த பொதுமக்களிடம் பேசிய கூடுதல் காவல் கண்காணிப்பாளர் புகார் மனுதாரரின் புகாரினை கேட்டறிந்து அப்புகாரினை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்தார். மேலும் இந்த சிறப்பு மனு முகாமில் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையம் மற்றும் சிறப்பு பிரிவு காவல்துறையினர் கலந்து கொண்டு புகார் மனுக்களை பெற்று விசாரணை செய்தனர். இந்த சிறப்பு மனு முகாம் மூலம் பொதுமக்களிடம் இருந்து 35 மனுக்கள் பெறப்பட்டு சம்மந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story